Friday, November 15, 2013

வாழ்வின் உயர்வு!

வாழ்வின் உயர்வு!

தந்தை தனது வயலை இரு மகனிடம் ஒப்படைத்தார்.., அண்ணாவுக்கு திருமணமாகி ஐந்து குழந்தை இருந்தது. தம்பி இறுதிவரை திருமணம் செய்யவில்லை. தந்தையின் உத்தரவு படி விளைவை இருவரும் சமமாக பிரித்தனர். அண்ணா சிந்தித்தான்.., "எனக்கு முதுமைவந்தால் பிள்ளைகள் இருக்கிறார்கள் கவனிப்பதற்கு.. தம்பிக்கு யாரும் இல்லை.. அவனுக்கு தான் சேமிப்பு தேவை..!" ரகசியமாக ஒவ்வொருமாதமும் ஒரு மூட்டை தானியத்தை கொண்டு போய் தம்பியின் களஞ்சியத
்தில் வைக்க ஆரம்பித்தான்.

தம்பி மாறி சிந்தித்தான்.., "நானோ ஒருவன்.. அண்ணா குடும்பத்துக் அல்லவா அதிக பங்கு தேவை..!" அவனும் தன் பங்கில் இருந்து ஒரு மூட்டையை அண்ணாவின் களஞ்சியத்தி வைக்க ஆரம்பித்தான். இது இப்படியே பல வருடங்கள் நீடித்தது.

ஒருநாள் அண்ணா, தம்பி இருவரும் தானிய மூட்டைகளுடன் சந்தித்தார்கள். இருவரும் தர்மசங்கடமாக உணர்ந்து, பின்பு ஒரு வார்த்தை கூட பேசாது வழக்கபடியே அடுத்தவர் களஞ்சியங்களிலேயே இறக்கி விட்டு தத்தம் வீடு திரும்பினார்கள்.. பிற்காலத்தில் அந்த ஊரில் கோயில் எழுப்பத் தகுந்த இடத்தை தேடிய போது, அந்தச் சகோதரர்கள் சந்தித்த இடமே புனிதமாக அமைந்தது.

இது போல் அன்பில் தடுமாறகிற உயர்வை உணராமல் தொலைத்தவர் பலர். வாழ்வின் உயர்வு இதுபோல் அன்பில் இருக்கிறது

No comments:

Post a Comment