Friday, May 9, 2014

தமிழ் படிக்க தெரிஞ்சா படி

தமிழர் கலாச்சார விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய உச்ச நீதிமன்றத்துக்கு யார் அதிகாரம் கொடுத்தது? விலங்குகள் நலவாரியம் காளைகள் துன்புறுத்தப்படுவதாக சொல்கிறதே, இந்த ஜல்லிக்கட்டை தடை செய்தால் ஜல்லிக்கட்டு காளை இனமே அழியும் என்பது அதற்கு தெரியுமா ? ஜல்லிக்கட்டு காளைகள் அதற்காகவே வளர்க்கப்படுபவை. வேறு வேலைகள் அதற்கு இல்லை. வருடத்தில் ஓறிரு முறை நடைபெறும் நிகழ்ச்சிக்காக வருடம் முழுவதும் பயிற்சி பெறுபவை. விலங்குகள் நலவாரியத்துக்கு திராணி இருந்தால் நாடு முழுவதும் மாமிசம் உண்ணபடுவதை தடை செய்யட்டும். முடியுமா அவர்களால்? ஒரு பண்டிகைக்கு ஒட்டகத்தை வெட்டி சாப்பிடுகிறார்கள், மாட்டை வெட்டி சாப்பிடுகிறார்கள். இதை தட்டி கேட்க்க திராணி இல்லை. ஏனெனில் தமிழன் ஒரு இளிச்ச வாயன். ஐயாயிரம் வருடங்களாக நிகழ்ந்து வரும் ஒரு வீர விளையாட்டை தடை செய்ய நூறு வருடங்களுக்கும் குறைவாக தோன்றிய உச்ச நீதிமன்றத்துக்கு யார் அதிகாரம் கொடுத்தது? ஏறுதழுவல் என்னும் நிகழ்ச்சி பற்றி இதற்க்கு என்ன தெரியும். நமது ஜனநாயகம் என்கிறார்கள் ஆனால் சமூகத்தின் ஒருசாரார்க்கு மட்டும் ஓர வஞ்சனை என்ன நியாயம்? ஒரு கலாச்சார அடையாளத்தை அழிக்க பார்ப்பது என்ன நியாயம்? ஏற்கனவே பலதடவை நடந்த அகழ்வு ஆராய்ச்சிகளில் தமிழர் நாகரிகம் மிகவும் தொன்மையானது என்பதை வெளியிட மத்திய அரசு தயங்கியே வந்துள்ளது. அதே சமயம் வட நாகரீகங்களை தொன்மையானது என பொய்யாக நிரூபிக்க முயன்று தோற்றது நாடறியும். இன்னும் கொஞ்ச நாளில் மாட்டு பொங்கலன்று மாடுகளுக்கு கொம்பு சீவுவது மற்றும் கொம்புக்கு பெயிண்ட் அடிப்பது தவறு அதனால் மாட்டு பொங்கலை தடை செய் என்பார்கள். அதற்கும் நாம் தலையாட்டுவோமா. அடையாளங்களை இழப்பது இறப்பதற்கு சமம். சிந்திக்கவேண்டுமடா தமிழா. உலகின் ஆதி நாகரீக முன்னோடிகளான தமிழர்கள் பின்னோடிகளிடம் மிதிபட்டு நசுக்கப்படுகின்றனர் என்பது உண்மை. மாடுகளின் மீது அக்கறையோடு இருப்பதாக பாசாங்கு பண்ணும் உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டில் தினம் குடித்தழியும் தமிழனை காக்க டாஸ்மாக்கை மூடட்டுமே ஏன் செய்யவில்லை? இது அக்கறை ஒன்றுமில்லை அரசியல். ஏறுதழுவல் நிகழ்ச்சிக்கு நிறைய சுற்றுலா பயணிகள் வருவது வடக்கதிகாரர்களுக்கு உறுத்தலோ இல்லை, நம் அடையாளங்களில் ஒன்றை அழித்த சந்தோசமோ தெரியவில்லை காரணம். இந்த நூதனமான அரசியலில் சிக்கி தமிழ் இனம் என்ன பாடுபடப்போகிறதோ தெரியவில்லை.

No comments:

Post a Comment